8 வழி சாலை- விவசாயிகள் மீதான அடக்குமுறையை கண்டித்து சேலத்தில் திமுக ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் மீதான அடக்குமுறையை கண்டித்து சேலத்தில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
Recommended Video
சேலம்: சேலம்- சென்னை 8 வழி சாலையை கண்டித்து திமுகவினர் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு எட்டு வழி சாலை திட்டம் கட்டாயம் நடைபெறும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் அவ்வழியில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.
கருப்பு கொடி
இதை கண்டித்து விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் வந்த ஆட்சியரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளையும் கருப்பு பலூன்களையும் வீசியதை அடுத்து 192 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அடக்குமுறை
சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அப்போது திமுக நிர்வாகிகள் பேசுகையில் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவி நிலத்தை பறிக்கின்றனர்.
ஆடு மாடுகளுடன் பங்கேற்பு
பசுமையை அழித்துவிட்டு பசுமை வழிச்சாலை என பெயரிடுவதா. தாமும் ஒரு விவசாயி என்று கூறிக் கொண்டு நிலங்களை அழிக்கிறார் எடப்பாடி. எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது சேலத்துக்கு சாபகேடு என்று கடுமையாக விமர்சித்தனர். இந்த போராட்டத்தில் விவசாயிகள் ஆடு மாடுகளுடன் பங்கேற்றனர்.