For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆளுநரை திரும்ப பெறக்கோரி திமுகவினர் பேரணி.. தடுத்து நிறுத்தி கைது செய்தது போலீஸ்
ஆளுநரை திரும்ப பெறக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
ஆளுநரை திரும்ப பெறக்கோரி திமுகவினர் பேரணி.. வீடியோ
சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திரும்ப பெறக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவரது கன்னத்தை தட்டிக்கொடுத்தார்.
இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலாலின் இந்த நடவடிக்கையை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் இருந்து திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தலைமையில் அக்கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றனர்.
இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments
English summary
DMK condemns Governor Banwarilal Purohiot for the behaving to a female reporter in the press meet. DMK rally against Governor in Chennai Police arrested them.