திமுக ஆட்சியில் அதிமுக நிர்வாகிகள் தொலைபேசி ஒட்டு கேட்பு... போட்டு உடைக்கும் "விக்கிலீக்ஸ்"
சென்னை : தி.மு.க. ஆட்சியின் போது அ.தி.மு.க. நிர்வாகிகள் தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்க முயற்சி நடந்ததாக பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவையே கலங்கடித்த விக்கி லீக்ஸ் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக அலுவலக தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்காக இத்தாலி நிறுவனத்திடம் தி.மு.க. உதவி கேட்டதாக விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தி.மு.க.,விடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விக்கிலீக்ஸ் பொய் சொல்வதாக கூறினார். அதிமுக தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
விக்கிலீக்ஸ் போலியான தகவல்களை வெளியிடும் ஒரு போலி நிறுவனம் என்றும் இந்தியாவில் ஏராளமான தலைவர்கள் மீது விக்கிலீக்ஸ் குற்றம்சாட்டி உள்ளது எனவும், டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.