இந்திய அரசியலில் திமுகவின் பங்கு முக்கியமானது: கருணாநிதி வைரவிழாவில் உமர் அப்துல்லா பேச்சு
சென்னை: இந்திய அரசியலில் திமுகவின் பங்கு மற்றும் கருணாநிதியின் பங்கு முக்கியமானது என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் உமர் அப்துல்லா கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, தற்போதைய மத்திய அரசால் நாட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்றனர். இப்போது எதிர்க்கட்சிகள் இல்லாத பாரதம் என்றனர். காங்கிரஸ் மட்டுமல்ல எதிர்க்கட்சிகள் இல்லாத நாட்டை பாஜக உருவாக்க முடியாது. இதை நிரூபிக்கும் வகையில் இந்த மேடையில் அனைவரும் கூடியுள்ளோம்.
இந்திய அரசியலமைப்பு உரிமைகளை காப்பாற்ற நாம் ஒன்று கூடியுள்ளோம். எங்கள் கஷ்டத்தின்போது நீங்கள் உடனிருங்கள், உங்கள் கஷ்டத்தின்போது நாங்கள் துணை இருப்போம். கருணாநிதியுடன் எங்கள் குடும்பம் 3 தலைமுறையாக நட்பு பாரட்டி வருகிறது. எங்கள் கட்சி, மாநிலம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.