பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அக். 20-இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 20-ஆம் தேதி சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடுகிறது.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 20-ஆம் தேதி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும், குட்கா விவகாரம், ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகள் மீதான தீர்ப்புகள் மிகவும் எதிர்பார்க்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் வரும் 20-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளரான க.அன்பழகன் அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 20 -ஆம் தேதி அண்ணா அறிவாலயகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல், கட்சியின் ஆக்கப்பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும். இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.