திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவிற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ்(69) ஜெய்ஹித்புரத்தில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று இரவு உறங்கிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக வீட்டிலிருந்தவர்கள் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஏ.கே.போஸ் மூன்று முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவிற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், ஏ.கே.போஸ் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், அவரது மரணம், திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.