For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீரங்கம் தேர்தலுக்கு மூன்று நாள் மட்டுமே பிரச்சாரம் – இன்று முதல் வாக்கு சேகரிப்பில் மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் என்.ஆனந்தை ஆதரித்து இன்று முதல் 3 நாட்கள் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்த அக்கட்சியின் அறிக்கையில், "இடைத்தேர்தல் நடக்கும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் மற்றும் மணப்பாறை ஒன்றியங்களில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 9 ஆம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

DMK secretary M.K.Stalin starts his campaign today…

சோமரசம்பேட்டை, தீரன் நகர், சத்திரப்பட்டி, சமுத்திரம், மறவனூர் உள்ளிட்ட 10க்கும் அதிகமான இடங்களில் அவர் பேசுகிறார்.

நாளை அந்தநல்லூர் ஒன்றியத்தில் பிரச் சாரம் செய்கிறார். பிரச்சாரத்தின் இறுதி நாளான 11 ஆம் தேதி ஸ்ரீரங்கம் பகுதியில் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின், அன்று மாலை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் நடக்கும் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். மொத்தமாக 60 இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DMK secretary M.K.Stalin starts his campaign at srirangam today to support DMK candidate Anandh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X