For Daily Alerts
Just In
ஸ்மால் பஸ்களில் இரட்டை இலைச் சின்னம்.. ஜெயலலிதாவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ்
சென்னை: தமிழக அரசு சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மால் பஸ்கள் எனப்படும் சிற்றுந்துகளில் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை வரைந்திருப்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பெருநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து முதல்வர் ஜெயலலிதா தனது கட்சியின் தேர்தல் சின்னத்தை அரசுப் பேருந்துகளில் இடம் பெறச் செய்திருப்பதாக திமுக அதில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வக்கீல் நோட்டீஸை, திமுகவின் வழக்கறிஞர் அணி அனுப்பியுள்ளது. திமுக அளித்துள்ள வக்கீல் நோட்டீஸில், இந்த இரட்டை இலைச் சின்னங்களை அப்புறப்படுத்தாவிட்டால் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
The DMK on Monday slapped a legal notice on Tamil Nadu Chief Minister Jayalalithaa and others, charging her government with misusing official position by propagating her party’s symbol “two leaves” on recently launched small buses, besides complaining to Election Commission. The DMK legal wing has served the notices to State’s Transport Minister Senthil Balaji, Chief Secretary Sheela Balaakrishnan and Managing Director of Metropolitan Transport Corporation among others.