For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசக்கூடாது.. அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி

சட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மண்ணடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டம் ஒழுங்கு குறித்து திமுக விமர்சிப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், சட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசக்கூடாது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும்.

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

சென்னை சென்ட்ரல் ஜெயிலில் ஜெயிலர் எரித்து கொல்லப்பட்டது, சென்னை சட்டக்கல்லூரி மோதல், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மண்டை உடைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமைச்சர் முன்னிலையில் கொல்லப்பட்டது, இவை எல்லாம் திமுக ஆட்சியில் அரங்கேறியது.

அமைதி பூங்காவாக உள்ளது

அமைதி பூங்காவாக உள்ளது

தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக செயல்படுகிறது. திமுக ஆட்சியில் காவல்துறை செயல்பட முடியாத நிலையில் இருந்தது.

திமுக ஆட்சியில் டிசம்பர் 6 வரும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது.

பேச விரும்பவில்லை

பேச விரும்பவில்லை

சசிகலா திவாகரனுக்கு நோட்டிஸ் அனுப்பியது அவர்களின் குடும்ப பிரச்சனை, அவர்களின் குடும்ப பிரச்சனை குறித்து பேச விரும்பவில்லை.

தலைமை முடிவு செய்யும்

தலைமை முடிவு செய்யும்

கூட்டணி குறித்து பேச இது நேரமில்லை. தேர்தல் சமயத்தில் கட்சி தலைமை இதுகுறித்து முடிவு செய்யும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

English summary
Minister jayakumar meets press in Chennai. Jayakumar has said DMK should not talk about law and order. People know how law and order existed in the DMK regime he said further.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X