பொதுக்கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சி தலைவரை நியமிக்காதது ஏன்?- திமுக வெளிநடப்பு
பொதுக்கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை நியமிப்பதே சட்டமன்ற மரபு. மரபை மீறி தலைவர் நியமிக்கப்பட்டதை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
சென்னை: 2016 - 17ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். அதன்படி 2016 - 17ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழுவுக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேரும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
இதுபோல் 2016 - 17ஆம் ஆண்டிற்கான பொதுக்கணக்கு குழுவுக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2016 - 17ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழுவுக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2016 - 17ஆம் ஆண்டிற்கான அவை உறுப்பினர் குழுவுக்கு 14 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சட்டசபை மரபை மீறி பொதுக்கணக்கு குழு தலைவரை நியமித்ததை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. பொதுக்கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை நியமிப்பதே சட்டசபை மரபு. மரபை மீறி தலைவர் நியமிக்கப்பட்டதை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
இதனிடையே தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.