பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு.. செப். 10ம் தேதி பாரத் பந்த்திற்கு காங். அழைப்பு.. திமுக ஆதரவு
Recommended Video
சென்னை: செப்டம்பர் 10ம் தேதி நடைபெற உள்ள பாரத் பந்த்திற்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் செப்டம்பர் 10ம் தேதி காங்கிரஸ், நடத்தும் நாடு தழுவிய பாரத் பந்த்திற்கு திமுக ஆதரவு அளிக்கும்.
பெட்ரோல் - டீசல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டு லிட்டர் ரூ.100 ஐ நெருங்கி வருவது கவலை அளிக்கிறது. பாரத் பந்த் முழு அளவில் வெற்றி அடைய, திமுக அனைத்து வகையிலும் ஒத்துழைக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, 10ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்திற்கு சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பெட்ரோல் விற்பனை மையங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதேபோல் இடதுசாரி கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக 10ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.