காவிரி மருத்துவமனை வெளியே காத்திருக்கும் தொண்டர்கள், பத்திரிகையாளர்களுக்கு பிரியாணி.. திமுக அசத்தல்
Recommended Video
சென்னை: காவிரி மருத்துவமனைக்கு வெளியே குவிந்துள்ள திமுக தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்ளுக்கு சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான, ஜெ.அன்பழகன் உத்தரவின்பேரில் உணவு பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில், திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது முதல், திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில், காவிரி மருத்துவமனையை சுற்றிலும் குவிந்து நின்று கருணாநிதியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள்.
ஓட்டல்களுக்கு சென்று சாப்பபிட்டுவிட்டு வந்து அங்கேயே சாலையில் படுத்து தூங்குகிறார்கள். இதேபோல பத்திரிகையாளர்களும் சாலையிலேயே உட்கார்ந்திருக்கிறார்கள். இரவு அங்கேயே படுத்துக்கொள்கிறார்கள்.
|
தொண்டர் கோரிக்கை
இதையடுத்து, பத்திரிகையாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கினால் நன்றாக இருக்குமே என்று நெட்டிசன் ஒருவர் ஜெ.அன்பழகனை டிவிட்டரில் தொடர்பு கொண்டு கோரிக்கைவிடுத்தார். இதையேற்ற திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன், உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
— J Anbazhagan (@JAnbazhagan) July 30, 2018 |
பிரியாணி
இதுகுறித்து ட்விட்டரில் நேற்று அவர் கூறுகையில், "பத்திரிகையாளர்களக்கு பிரியாணி, கழகத் தோழர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு மதிய உணவு, 5000 குடிநீர் பாட்டில்கள் சற்று முன் வழங்கப்பட்டது. மேலும் இரவு "Fried Rice" வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன" என்றார்.
நிம்மதியில் தொண்டர்கள்
இதற்கான புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்களும், பத்திரிகையாளர்களும், வேறு எங்கும் அலையாமல் அங்கேயே சாப்பிட்டுவிட்டு அங்கேயே குழுமியுள்ளனர்.
அதிமுக தொண்டர்கள் நிலை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, தொண்டர்கள் கேட்பாரற்று குழுமியிருந்தது நினைவிருக்கலாம்.