For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக கவுன்சிலரின் தந்தை வெட்டிக்கொலை.. ஆவடியில் பதற்றம்

ஆவடி நகராட்சி கவுன்சிலர் சிங்காரத்தின் தந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

திருவள்ளுர்: ஆவடி நகராட்சி திமுக கவுன்சிலரின் தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி நகராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர் சிங்காரம். இவரின் தந்தை வீரராகவன்(65) இன்று மாலை ஆவடி டேங்க் பேக்டரி அருகில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

 DMK ward member's father murdered in Avadi

படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்த வீரராகவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார் என்ற விவரமோ, எதற்காக கொலை செய்தார்கள் என்ற விவரமோ இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
singaram, a councillor of Avadi municipality, his father murdered in Avadi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X