ஸ்டாலினின் தப்புத் தாளம் எடுபடாது.. எடப்பாடி அடிக்கும் ராஜ மேளமே எடுபடும்.. ராஜேந்திர பாலாஜி
ஒட்டப்பிடாரம்: இடைத்தேர்தலை வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் போடும் தப்புத்தாளம் எடுபடாது என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கும் ராஜமேளமே எடுபடும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில். 22 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலை வைத்து திமுக தலைவர் ஸ்டாலின், தினகரன் ஆகியோர் தப்புத்தாளம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அது எடுபடாது. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கும் ராஜ மேளமே தேர்தலுக்கு பின்பு எடுபடும் என்றார்.
ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் திமுக உள்ளிட் அனைத்து கட்சிகளுமே டெபாசிட் இழக்கும் என்று கூறிய ராஜேந்திர பாலாஜி, அமமுக விற்கு வாக்களிக்கும் எண்ணத்தில் மக்கள் இல்லை என்றார்.
அறந்தாங்கி இரத்தினசபாபதி உள்ளிட்ட மூவருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய ராஜேந்திர பாலாஜி, அதன் அடிப்படையிலேயே அதிமுக கொறடா சட்டசபை சபாநாயகரிடம் புகார் அளித்ததாக கூறினார்.
கமல்ஹாசன் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை.. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
திமுகவிற்கும் தினகரன் கட்சியினருக்கும் உறவு உள்ளது மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த பிரச்சனை மூலம் தெரிந்து விட்டதாகவும் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார்.