For Quick Alerts
For Daily Alerts
Just In
விஸ்வரூபம் எடுக்கும் சரக்கரை விலை உயர்வு பிரச்சினை.. நவ.6ல் ரேஷன் கடைகள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்
சர்க்கரை விலையை கிலோவுக்கு ரூ.13.50 என்ற விலையிலிருந்து ரூ.25ஆக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி, அனைத்து ரேஷன் கடைகளுக்கு முன் திமுக சார்பில் போராட்டங்களல் நடத்தப்பட உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சர்க்கரை விலையை கிலோவுக்கு ரூ.13.50 என்ற விலையிலிருந்து ரூ.25ஆக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை அவர் தெரிவித்திருந்தார். உணவு பாதுகாப்பு சட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டதுதான், இந்த விலையேற்றத்திற்கு காரணம் என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.
Comments
English summary
DMK will protest on November 6 in front of ration shops, says MK Stalin.
Story first published: Saturday, October 28, 2017, 14:40 [IST]