கருணாநிதி குறித்து இழிவான டிவிட்:திருவள்ளூரில் திமுகவினர் போராட்டம்.. எச் ராஜா கொடும்பாவி எரிப்பு!
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக டிவிட்டியிருந்த எச் ராஜாவைக் கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக டிவிட்டியிருந்த எச் ராஜாவைக் கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் டென்ஷன் ஆன பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா திமுக தலைவர் கருணாநிதி, அவரது துணை ராஜாத்தியம்மாள், அவர்களின் மகள் கனிமொழி ஆகியோர் குறித்து தரக்குறைவாக டிவிட்டியிருந்தார்.
எச் ராஜாவின் இந்த டிவிட்டுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றனர். எச் ராஜாவைக் கண்டித்து நேற்றுமுதல் திமுகவினர் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் எச் ராஜாவுக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எச் ராஜாவைக் கண்டித்து முழக்கமிட்ட திமுகவினர் எச் ராஜாவின் கொடும்பாவியையும் எரித்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி குறித்த தனது டிவிட்டுக்கு எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இல்லையெனில் போராட்டம் தீவிரமடையும் என்றும் திமுகவினர் எச்சரித்துள்ளனர்.