சென்னை வந்த கனிமொழி, ஆ ராசா.. களைகட்டிய பறையாட்டம்!
2ஜி வழக்கில் இருந்து சிபிஐ நீதிமன்றம் விடுவித்ததை தொடர்ந்து சென்னை வந்த கனிமொழி மற்றும் ஆ ராசாவுக்கு விமான நிலையத்தில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சென்னை 2ஜி வழக்கில் இருந்து சிபிஐ நீதிமன்றம் விடுவித்ததை தொடர்ந்து சென்னை வந்த கனிமொழி மற்றும் ஆ ராசாவுக்கு விமான நிலையத்தில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் மீது டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சிபிஐ குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தீர்ப்புக்குப் பிறகு இன்று சென்னை வந்த கனிமொழி மற்றும் ஆ ராசாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
|
களைகட்டும் பறையாட்டம்
கனிமொழி, ஆ.ராசா சென்னை வந்தனர்! - களைகட்டும் பறையாட்டம்
|
விழாகோலம் பூண்டது
2ஜி பொய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா , மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தமிழகம் வருவதையொட்டி விழா கோலம் பூண்டது சென்னை விமான நிலையம்!
|
சென்னை ஏர்போர்ட்..
கனிமொழி & ராசா சென்னை ஏர்போர்ட்..
|
விமான நிலையத்தில் ஸ்டாலின்
ஆ.ராசா,கனிமொழி ஆகியோரை வரவேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின்!
|
அண்ணன் ஆ ராசா
தற்போது சென்னை விமான நிலையத்திற்கு அக்கா திருமதி கனிமொழி அண்ணன் ஆ.ராசா அவர்கள் வருகை