சமூகவலைதளங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் முடிவு சர்வாதிகாரத்தின் தொடக்கம்: ஸ்டாலின் கண்டனம்!
இமெயில், பேஸ்புக், டிவிட்டர் சமூக வலைதளங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: இமெயில், பேஸ்புக், டிவிட்டர் ஆகிய சமூக வலைதள நடவடிக்கைகளை கண்காணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இமெயில், பேஸ்புக், டிவிட்டர் ஆகிய சமூக வலைதள நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, மின்னஞ்சல்கள், பேஸ்புக், ட்விட்டர் நடவடிக்கைகளை கண்காணிக்க சமூக ஊடக பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்துவது பிஜேபி அரசின் சட்ட விரோத நடவடிக்கை.
This move by BJP Govt to use social media analytical tools to monitor emails, Facebook, Twitter activity raises serious issues of illegal surveillance & marks the beginning of a totalitarian regime. Govt must stop all such unconstitutional endeavours.
— M.K.Stalin (@mkstalin) May 25, 2018
https://t.co/NkA0v1ALpE
இது சர்வாதிகார ஆட்சியின் தொடக்கத்தை குறிக்கிறது. இத்தகைய அரசியலமைப்புக்கு எதிரான முயற்சிகளை அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.