For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாழ்க்கையையும் சினிமா போல் நினைத்தீர்களா? நடிகர் ஜெய்யை சரமாரியாக விளாசிய நீதிபதி!

நீதிமன்றத்தில் சரணடைந்த நடிகர் ஜெயிடம் வாழ்க்கையையும் திரைப்படம் போல் நினைத்தீர்களா என சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வாழ்க்கையையும் சினிமா போல் நினைத்தீர்களா?-ஜெய்யை விளாசிய நீதிபதி!-வீடியோ

    சென்னை: நீதிமன்றத்தில் சரணடைந்த நடிகர் ஜெயிடம் வாழ்க்கையையும் திரைப்படம் போல் நினைத்தீர்களா என சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி ஆப்பிரஹாம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    கடந்த மாதம் 21ஆம் தேதி அதிகாலையில் குடிபோதையில் தனது ஆடி காரை ஓட்டிச்சென்றார் நடிகர் ஜெய். அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த அவர் அடையாறு பாலத்தின் மீது மோதினார்.

    இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பினார் ஜெய். குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மண்ணை தூவிவந்த ஜெய்

    மண்ணை தூவிவந்த ஜெய்

    இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த வழக்கில் ஆஜராகமால் தொடர்ந்து மண்ணை தூவி வந்தார் ஜெய்.

    தலைமறைவான ஜெய்

    தலைமறைவான ஜெய்

    இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது.ஆனால் அவர் நேற்று வரை ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாக உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    நீதிமன்றத்தில் சரண்

    நீதிமன்றத்தில் சரண்

    இதையடுத்து 2 நாட்களுக்குள் அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து நடிகர் ஜெய் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    ஜெய்யை விளாசிய நீதிபதி

    ஜெய்யை விளாசிய நீதிபதி

    அப்போது வாழ்க்கையையும் சினிமாபோல் நினைத்தீர்களா என நடிகர் ஜெயிடம் நீதிபதி ஆப்பிரஹாம் காட்டமாக கேட்டார். மேலும் கார் கண்ணாடிகளில் கறுப்புக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    கறுப்பு ஸ்டிக்கருக்கு நடவடிக்கை

    கறுப்பு ஸ்டிக்கருக்கு நடவடிக்கை

    அதற்கு ஆமாம் என்று பதிலளித்தார் ஜெய். இதைத்தொடர்ந்து ஜெயின் கார் கண்ணாடிகளில் உத்தரவை மீறி கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது குறித்து ஏன் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் நீதிபதி விளாசினார்.

    English summary
    Chennai Saidapet court questioned actor jai for not appearing in the court. Judge asked Actor Jai that do u look at life as cinema? Actor Jai has surrendered to the Saidapet court in a case of drunk and driving
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X