For Daily Alerts
Just In
ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா? அப்பல்லோவிடம் ஹைகோர்ட் கேள்வி
ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா என அப்பல்லோ மருத்துவமனையிடம் சென்னை ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா என அப்பல்லோ மருத்துவமனையிடம் சென்னை ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் தான்தான் ஜெயலலிதா பெற்ற மகள் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தான் தான் ஜெயலலிதாவின் வாரிசு என்பதை உறுதி செய்யும் வகையில் டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர்களின் குடும்ப முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் இந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் ரத்த மாதிரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் இதுகுறித்து மார்ச் 7ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Comments
chennai high court appolo hospital jayalalitha சென்னை உயர்நீதிமன்றம் அப்பல்லோ மருத்துவமனை கேள்வி ஜெயலலிதா
English summary
Chennai high court question Apollo hospital that do you have Jayalalitha blood sample? In the Amrutha case chennai high court raises questiones.
Story first published: Friday, February 23, 2018, 11:52 [IST]