கமலும், கவுதமியும் இத்தனை வருடம் இணைந்து வாழ்ந்தது எதற்காக தெரியுமா? #Gautami
சென்னை: கமல், கவுதமி இணைந்து வாழ்ந்ததற்கு என்ன காரணம் என்று முன்பு ஒருமுறை தனித்தனி நிகழ்வுகளில் அவர்கள் மவுனம் கலைத்தனர்.
2005ம் ஆண்டு முதல் கவுதமியுடன் இணைந்து வாழ்ந்து வந்தார் கமல். இந்நிலலையில் மலையாள பத்திரிகையொன்றுக்கு 2013ல் அளித்த பேட்டியில் முதல்முறையாக அதுகுறித்து மவுனம் கலைத்தார் கமல்.
கமல் கூறியதாவது: தேவைப்படும்போது நட்பை பயன்படுத்திக்கொண்டு பிறகு வேண்டாம் என்று சொல்வது தவறு. அது நல்ல நட்புக்கு அழகில்லை. கவுதமி என் கூடத்தான் இருக்கிறார்.
தப்பு இல்லை
கவுதமியின் கவலைகளை நான் புரிந்து வைத்திருக்கிறேன். அவருக்கு பாசத்தையும், சந்தோஷத்தையும் நான் தருகிறேன். வேதனையிலும் பங்கெடுக்கும்போதுதான் பந்தம் பலப்படும். மனதுக்கு பிடித்த ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் என்ன தவறு இருக்கிறது?
விமர்சன கவலையில்லை
விமர்சனம் செய்கிறவர்களுக்கு அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். மன ஒற்றுமையோடு சேர்ந்து வாழ்கிறவர்களுக்கு அது சரி என்றால் மற்றவர்கள் அதை ஏன் எதிர்க்க வேண்டும்? என்றார் கமல். கவலைகளை பங்கிட்டு குறைப்பதே இந்த நட்பின் நோக்கம் என்பது கமல் வாதம்.
கவுதமியும் உருக்கம்
கிட்டத்தட்ட அதையே எதிரொலித்து ஒரு முறை கவுதமியும் வாய் திறந்திருந்தார். அவர் கூறுகையில், கமல் என் வாழ்க்கையின் தூண் என்பதை விட அதை விடவும் மேலானவர் விஸ்வரூபம் படத்தின் போது என்னை அழைத்து இப்படத்தின் காஸ்டியூமராக நீ இருக்கிறாயா என்றார். உடனடியாக சரி என்று சொன்னேன். மீண்டும் அவர் எனக்கு வாழ்வளித்தவர் என்று கூறினார் கவுதமி. புற்றுநோயிலிருந்து கவுதமி மீண்டுவர கமலின் ஆதரவு இருந்ததாக கவுதமி கூறி பெருமைப்பட்டுள்ளார்.
காரணம் என்ன
இப்படிப்பட்ட ஆதர்ஷ நட்புதான் இப்போது முறிந்துள்ளது. ஆனால், யார் மீதும் குறை சொல்லாமல் மிகுந்த நாகரீகத்துடன் நட்புக்கு விடை கொடுத்துள்ளார் கவுதமி. இந்த முறிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து போகபோகத்தான் தெரியும்.