For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை: ஈ.சி.ஆர் கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின்களால் பரபரப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் டால்பின் ஒன்று குட்டியோடு கரை ஒதுங்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நைனார்குப்பம் பீச்சில், நேற்று, டால்பின் மற்றும் ஒரு குட்டி டால்பின் கரை ஒதுங்கியது. ட்ரீ பவுண்டேசன் எனும் என்.ஜி.ஓ இதுபற்றிய தகவல் கிடைக்கப்பெற்றது.

Dolphin washes ashore off ECR near Chennai

பாலூட்டி இனத்தை சேர்ந்தவை டால்பின்கள். எனவே அவை பிரசவிக்கும்போது, மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றன. அப்படித்தான், குட்டியை ஈனும்போது, இந்த பெண் டால்பின் இறந்திருக்க கூடும் என்றும், அதோடு அதன் குட்டியும் கரை ஒதுங்கியுள்ளதும் என்றும் என்.ஜி.ஓ வட்டாரங்கள் தெரிவித்தன.

பெண் டால்பினின் மேல் தாடையில் 34 பற்களும், கீழ் தாடையில் 40 பற்களும் இருந்தன. 286 செ.மீ நீளமும், 210 கிலோ எடையும் கொண்ட அந்த டால்பினும், அதன் குட்டியும், கடலில் இருந்து சுமார் 20 அடி தூரத்தில் ஆழ தோண்டி புதைக்கப்பட்டதாக என்.ஜி.ஓ வட்டாரங்கள் தெரிவித்தன.

டால்பின் கரை ஒதுங்கிய சம்பவம் நைனார்குப்பம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

English summary
A dead dolphin and its stillborn calf were washed ashore at Nainarkuppam beach near Uthandi on the East Coast on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X