For Daily Alerts
Just In
திருச்செந்தூர் அருகே திடீரென கூட்டமாக கரை ஒதுங்கிய டால்பின்கள்!
திருச்செந்தூர் அருகே திடீரென டால்பின்கள் கரை ஒதுங்கியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே திடீரென டால்பின்கள் கரை ஒதுங்கியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த புன்னக்காயல் கடற்கரையோரத்தில் திடீரென 15 டால்பின்கள் கரை ஒதுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மீனவர்களும் பொதுமக்களும் கரை ஒதுங்கிய டால்பின்களை மீட்டு கடலுக்குள் கொண்டு விட்டனர்.
கடலுக்குள் விட்ட போதிலும் மீண்டும் 4 டால்பின்கள் கரைக்கு வந்து உயிரிழந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி ஏற்படும் என வதந்திகள் பரவிய நிலையில் திருச்செந்தூர் அருகே திடீரென் டால்பின்கள் கரை ஒதுங்கிய சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Dolphins secluded near Thiruchendur sea shore. There has been a big shock among the people by this incident.
Story first published: Monday, November 27, 2017, 21:21 [IST]