சசிகலா புஷ்பாவுக்கும் மட்டுமல்ல கணவருக்கும் நிர்வாண மசாஜ்.... பணிப்பெண் பானுமதி 'பகீர்'
சென்னை: சசிகலா புஷ்பாவுக்கு மட்டுமல்ல....அவரது கணவருக்கும் நிர்வாண மசாஜ் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக போலீசிடம் கொடுத்த மனுவில் பகீர் புகாரைத் தெரிவித்திருக்கிறார் அவரது வீட்டில் வேலைபார்த்த இளம்பெண் பானுமதி.
சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த 8-ந் தேதி அவரது வீட்டில் வேலைபார்த்த பானுமதியும் அவரது சகோதரி ஜான்சிராணியும் புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில் சசிகலா புஷ்பா வீட்டில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்திருக்கிறார் பானுமதி.
அந்த புகார் மனுவில் பானுமதி கூறியிருப்பதாவது:
நான், 2011-ல் சசிகலா புஷ்பாவின் வீட்டுக்கு வீட்டு வேலைக்குப் போனேன். அவர் எப்போதும் கறாராக இருப்பார். சில சமயம் மது போதையில்தான் வீட்டுக்கு வருவார்.
நிர்வாண மசாஜ்
வந்தவுடன் ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாகக் கட்டிலில் படுப்பார். என்னை மசாஜ் செய்துவிடச் சொல்வார். சரியாக மசாஜ் செய்யவில்லை என்றால் அசிங்கமாகப் பேசி காலால் எட்டி உதைப்பார்.
கணவருக்கும் நிர்வாண மசாஜ்
அவரது கணவரும் ஒருநாள், அக்காவுக்கு மட்டும்தான் நீ மசாஜ் பண்ணிவிடுவாயா? எனக்கும் பண்ணிவிடு என்று சொல்லிக் கட்டிலில் நிர்வாணமாகப் படுத்துக்கொண்டார். முடியாது என்று நான் அழுதேன். மசாஜ் பண்ணவில்லை என்றால், கொன்னுடுவேன் என்று என் கன்னத்தில் அடித்தார். வேறு வழியின்றி மசாஜ் செய்தேன்.
அந்த இடத்தில்...
பிறகு அவருடைய ஆண் உறுப்பில் எண்ணெய் தடவி, மசாஜ் செய் என்று கொடுமைப் படுத்தினார். இப்படிப் பலமுறை அவருக்குச் செய்திருக்கிறேன்.
மகனின் லீலைகள்...
சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் மேல் வந்து விழுவான். என் மீது கைவைத்து செக்ஸ் டார்ச்சர் செய்வான். இதை சசிகலா புஷ்பாவிடம் சொன்னேன். அவரோ, அவனுக்கு அப்படிப்பட்ட வயசு. அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கோ. நானும் 18 வயசுல அப்படித்தான் இருந்தேன் என்று சொல்வார்.
இவ்வாறு புகாரில் பானுமதி கூறியுள்ளார்.