"வெள்ளையா" இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு சொன்னது தப்பாப் போச்சே!
அமெரிக்க அதிபர் தேர்தலில் கருத்துக் கணிப்புகளையும் தாண்டி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: வர வர அமெரிக்கர்களும் கூட நம்மவர்கள் மாதிரி ஆகி விட்டார்கள். கருத்துக் கணிப்பில் சொன்னது ஒன்றாகவும், முடிவு வேறாகவும் மாறி விட்டது அமெரிக்க அதிபர் தேர்தலில்.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் ஹிலரி கிளிண்டன்தான் அதிபர் தேர்தலில் வெல்வார் என்று கூறப்பட்டுவந்தது. சில வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் கூட ஹிலரிக்கு சாதகமாகவே இருந்தது.
தேர்தலுக்கு முந்தைய விவாதங்களிலும் கூட ஹிலரியே வென்றிருந்தார். டிரம்ப்பே வாய் விட்டுப் புலம்பும் அளவுக்கு ஹிலரி ஆதரவு அலையே காணப்பட்டது. ஆனால் முடிவு தலை கீழாகப் போய் விட்டது. சில முக்கிய மாகாணங்களை டிரம்ப் வென்றதால் முடிவு அவருக்கு சாதகமாக மாறி விட்டது.
உலக அளவிலான எதிர்பார்ப்பும் கூட ஹிலரி பக்கமே சாய்ந்து காணப்பட்டது. ஹிலரியே வெல்வார் என்று பல நாடுகளும் நம்பவும் ஆரம்பித்தன. ஆனால் அத்தனையையும் மீறி டிரம்ப் வென்று விட்டார்.
நம்ம ஊரில்தான் கருத்துக் கணிப்புகள், எக்ஸிட் போல்களை மீறி தேர்தல் தீர்ப்பை மக்கள் அளிப்பார்கள். தற்போது அமெரிக்க தேர்தலிலும் கூட அதே போல நடந்திருப்பது வியப்புக்குரியதாகியுள்ளது.
கடைசியில், "வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்டா"ன்னு வடிவேலு படத்தில் வந்த வசனம் "ராங்"காப் போயிருச்சே பாஸ்!