சுடச் சுட கழுதைப் பால் குடிங்க... சிக்குன்குனியா ஓடிப் போய்ரும்.. கரூரில் ஜரூர் விற்பனை!
கரூர்: கரூர், லாலாப்பேட்டை பகுதியில் கழுதைப்பால் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் பொதுமக்கள் முன்வந்து வாங்குகின்றனர்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய்கள் ஏற்பட்டு என்னதான் மருத்துவம் பார்த்தாலும், பாட்டி வைத்தியம் எனப்படும் கைவைத்தியதாலும் சில நோய்கள் சரியாகலாம். அந்த வகையில் கழுதை பாலுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் பொதுமக்களிடம் மவுசு இன்னும் இருக்கிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலிருந்து கழுதைகளுடன் வந்துள்ள ஒரு குழுவினர், மகாதானபுரம், ஒமாந்தூர், சிந்தலவாடி, லாலாப்பேட்டை ஆகிய பகுதிகளில் கழுதைப் பால் விற்பனை செய்து வருகின்றனர்.
ஒருசங்கு பால் ரூபாய் 30க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் கேட்ட உடன் சுடசுட பால் கரந்து விற்பனை செய்யப்படுகிறது. கழுதைப் பால் குடிப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது என்று சொல்கிறார்கள். மேலும் சளி, இருமல், மஞ்கள்காமாலை. சிக்கன்குனியா ஆகிய நோய்களுக்கு நல்ல மருந்து என விற்பனையில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர்.