வதந்திகளை நம்பாதீர்கள்... கருணாநிதி நலமுடன் உள்ளார்.. ஜெ. அன்பழகன் டிவிட்!
திமுக தலைவர் கருணாநிதி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்.
அவருக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் கோபாலபுரம் வீட்டிலேயே வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
துணைமுதல்வர், அதிமுக அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரம் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான திமுக தொண்டர்களும் கோபாலபுரத்தில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அக்கட்சியின் எம்எல்ஏவான ஜெ.அன்பழகன் டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கூறியுள்ளார். இதுகுறித்து ஜெ. அன்பழகன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவர்கள் கண்கானிப்பில் நலமுடன் உள்ளார், எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன, இன்று மாலை கோபாலபுரம் சென்று வந்தேன், கடந்த சில நாட்களாக இருந்த உடல்நிலையிலேயே தான் தற்போது இருக்கிறார். விரைவில் நலம் பெறுவார், வதந்திகளை நம்பாதீர்.
— J Anbazhagan (@JAnbazhagan) July 26, 2018
தலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் உள்ளார், எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன, இன்று மாலை கோபாலபுரம் சென்று வந்தேன், கடந்த சில நாட்களாக இருந்த உடல்நிலையிலேயே தான் தற்போது இருக்கிறார். விரைவில் நலம் பெறுவார், வதந்திகளை நம்பாதீர் என்று அவர் கூறியுள்ளார்.