சத்துணவில் கெட்டுப்போன முட்டை... ட்வீட்டிய கமல்
கெட்டுப்போன முட்டைகள் சத்துணவில் வழங்கப்பட்டுள்ளதை தனது ரசிகர்கள் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: பெரம்பலூரில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டை வழங்கப்படுவதாக நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் சட்டத்தை மீறாமல் வக்கீல்களின் ஆலோசனை பெற்று செயல்படவும் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே கமல்ஹாசன் டுவிட்டரில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு அரசியல் செய்து வருகிறார். இன்றைய தினம் சத்துணவு முட்டை பற்றி பதிவிட்டுள்ளார்.
பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது
— Kamal Haasan (@ikamalhaasan) August 1, 2017
பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது. கமலின் சத்துணவு முட்டை பதிவிற்கு சிலர் கிண்டலாகவும் பரிவிட்டுள்ளனர்.
முட்டைகளை ஆட்டை போடும் நிலை வருமேல்..
— கா-லா-சோ-ழா (@ArviBala_G) August 1, 2017
அதை கோட்டை விட்ட காரணம் கருதி யாம் நாட்டை விட்டு போகவும் தயங்கேன்...பட் இப்போ..
ஒரு சின்ன பிரேக்😂😆
முட்டைகளை ஆட்டை போடும் நிலை வருமேல்.. அதை கோட்டை விட்ட காரணம் கருதி யாம் நாட்டை விட்டு போகவும் தயங்கேன்...பட் இப்போ.. ஒரு சின்ன பிரேக் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.