நான் ஜல்லிக்கட்டு நாயகனா? காளையை அடக்க சொன்னால் என்பாடு திண்டாட்டம்தான்.. காமெடி செய்த ஓபிஎஸ்!
தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்க வேண்டாம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உறுப்பினர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்க வேண்டாம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உறுப்பினர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடி நடைபெற்று வருகிறது. இதில் நான்கு நாட்களாக சட்டசபையை புறக்கணித்த திமுக உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கார சார விவாதம் நடைபெற்றது.
நகைச்சுவை
இந்நிலையில் சட்டசபையில் இன்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் பேசினார்.
அவசரச்சட்டம்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றி மத்திய அரசின் ஒப்புதல் பெற்றார்.
செல்லமாக அழைப்பு
இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் அதிமுக உறுப்பினர்களும் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.
அன்பு கட்டளை
இந்நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்தில் தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைத்த உறுப்பினருக்கு,
என் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்' என கூற வேண்டாம் என அன்பு கட்டளையிட்டார் ஓபிஎஸ்.
என்பாடு திண்டாட்டம்தான்
ஜல்லிக்கட்டு பார்க்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச்சொன்னால் என்னவாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என ஓ.பி.எஸ் நகைச்சுவையாக பேசினார்.