For Daily Alerts
Just In
வாந்தி எடுத்து மயங்கி விழுந்த ஜி.கே.மணி.. மருத்துவமனையில் அனுமதி.. ராமதாஸ் நலம் விசாரித்தார்
சில வாரங்களுக்கு முன்பு ஜிகே.மணி தனது வீட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டார். இதில் காலில் பலத்த அடிபட்டது. இதையடுத்து இடது காலில் கட்டு போட்டுள்ளனர். அவர் சக்கர நாற்காலியில்தான் நடமாடி வருகிறார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு சுய நினைவை இழந்த நிலையில் இருந்த அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், மற்றும் பாமகவினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். டாக்டர் ராமதாஸ், மணியை நேரில் பார்த்தார்.
ஜி.கே. மணியின் உடல் நிலை தற்போது தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
PMK founder Dr Ramadoss paid a visit to PMK leader G K Mani at a Chennai hospital.
Story first published: Tuesday, December 2, 2014, 11:25 [IST]