கதம் கதம்... காதலித்த பெண்ணை கைவிட்ட கல்யாண மன்மதனுக்கு 'காப்பு'
தன்னைக் காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞரை போலீசில் புகார் செய்து சிக்கவைத்துள்ளார் இளம்பெண். ஆனால் இளைஞரை விட்டுவிட்டு புகார் கொடுத்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்திவருகிறது போலீ
வேலூர்: காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்யமுயன்றவரின் திருமணத்தை தடுக்க சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்துவது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அடுத்த பாச்சல் கல்லறைமேடு பகுதியை சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை கே.கே நகரை சேர்ந்த சந்தியா (எ) முருகேஸ்வரி என்ற பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் வலையில் சிக்கவைத்து, ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் சந்தியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேசவனிடம் முறையிட்டுள்ளார். அதற்கு திருமணம் செய்ய மறுத்த அவர் மீது கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருத்தணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் வேறொரு பெண்ணுடன் கேசவன் என்பவருக்கு திருமணம் நடைப்பெறுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தியா அங்கு சென்று அந்தத் திருமணத்தைத் தடுத்த நிறுத்த முயன்றுள்ளார்.
உடனடியாக சந்தியாவை திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர். கேசவன் மீது திருத்தணி காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் முன் ஜாமீன் பெற்று திருமணம் நடத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.