அடி, உதை, மிதி.. கோர்ட்டுக்குள் 17 காமக்கொடூரர்களுக்கு நடந்தது இதுதான்.. பரபரப்பு வீடியோ
Recommended Video
சென்னை: 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்த 17 காமக் கொடூரர்கள் மீதும் சென்னை மகளிர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
அப்போது செல்போனில் எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது லீக்காகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. அடி உதை, மிதி என சரமாரியாக தாக்குதல் அரங்கேறியுள்ளது.
#WATCH: Dramatic visuals from Mahila Court in Chennai where lawyers thrash the 18 accused, who sexually harassed an 11-year-old girl for over a period of 7 months. #TamilNadu pic.twitter.com/8ASDOlm7gW
— ANI (@ANI) July 17, 2018
இன்னும் கூட வழக்கறிஞர்களுடன் நீதிபதி தருமன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை சிறைக்கு அழைத்து செல்ல முடியாமல் போலீசார் தவிக்கிறார்கள். எனவே கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாரும் வழக்கறிஞர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.