பயிர்கள் கருகிய அதிர்ச்சி.. விவசாயி சுருண்டு விழுந்து மரணம்
பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் மானாமதுரையில் விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை: மானாமதுரையில் நீரின்றி பயிர்கள் கருகியதால், ஏற்பட்ட அதிர்ச்சியில் விவசாயி ராமகிருஷ்ணன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆலம்பச்சேரியில் வசித்து வருகிறார் ராமகிருஷ்ணன். 61 வயதான இவர், தனது நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் காய்ந்து வருவதைக் கண்டு மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல இன்று தனது வயலுக்கு சென்ற ராமகிருஷ்ணன், கருகிய பயிர்களை கண்டு மனமுடைந்து அங்கேயே சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார். வயலுக்கு சென்றவரை காணவில்லை என்று தேடிய போது அவர் இறந்து கிடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடரும் விவசாயிகள் மரணத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்றும் விவசாய மக்கள் கோரி வருகின்றனர்.