For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை விமான நிலையத்தில் 3 1/2 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

மதுரை விமான நிலையத்தில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

மதுரை: விமான நிலையத்தில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுரையிலிருந்து கொழும்பு நோக்கி செல்ல தயாராக இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை செய்தனர். அப்போது சுப்பிரமணியன் என்ற பயணியின் பையில் சந்தேற்திற்கு இடமான ஒரு பொட்டலம் இருந்தது.

Drugs seized in the Madurai Airport.

அதனை சோதனை செய்த பொழுது அதில் மெத்த கோலான் என்ற போதைப்பொருள் இருப்பதை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அதனை கைப்பற்றினர். இதுதொடர்பாக சுப்பிரமணியத்திடமும் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு மூன்றரை கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதனிடையே கோலாலம்பூருக்கு ஊதுபத்தி கட்டுகளில் மறைத்து கடத்த இருந்த 7 கிலோ போதைப்பொருளும் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Drugs seized in the Madurai Airport.In two incidents customs officials seized drugs. one was smuggling to Kuala Lumpur and another to Colombo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X