For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எப்படி அறைஞ்ச.. சப்புன்னு அறைஞ்சேன்.. சப் இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அடித்தவர் கம்பி எண்ணுகிறார்!

போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டரை டிரைவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை திருவான்மியூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை ஆட்டோ டிரைவர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் மஜீத் என்பவர், திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அடையாறிலிருந்து ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. சாலையில் கோணல் மாணலாக வந்த ஆட்டோவை கவனித்த சப்-இன்ஸ்பெக்டர் மறித்து நிறுத்தினார்.

Drunken auto driver beat Traffic Sub Inspector in Thiruvanmayur

பின்னர் ஆட்டோ ஓட்டி வந்த டிரைவரிடம் தாறுமாறாக ஓட்டி வந்தது குறித்து விசாரித்தார். அப்போது ஆட்டோ டிரைவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் சப்-இன்ஸ்பெக்டருக்கும் டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது தகராறாக மாறியதையடுத்து, ஆத்திரமடைந்த டிரைவர் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆட்டோ டிரைவரை திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் டிரைவரின் பெயர் பார்த்தசாரதி என்பதும், அதே பகுதியிலுள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இறுதியில் சப்-இன்ஸ்பெக்டர் டிரைவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

English summary
Drunken auto driver beat Sub Inspector in Thiruvanmayur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X