சென்னையில் வெளுத்து வாங்கிய கன மழை.. சுவர் இடிந்து ஒருவர் பலி
சென்னை: வடபழனியில், மழையால், சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலியானார். இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 வது நாளாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடபழனி, ஆர்காடு சாலையில், ஏ.வி.எம்., நிறுவனம் உள்ளது. இதன், சுற்றுச்சுவரை ஒட்டி, உணவுக்கடை இயங்கி வருகிறது. நேற்று பெய்த தொடர் மழையால், சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், உணவுக்கடை நடத்தி வந்த, காரைக்குடியைச் சேர்ந்த, 22 வயதான சின்னா என்2 இளைஞர், இடிபாடிகளில் சிக்கி, பலியானார்.
மேலும், கடையில் இருந்த இரண்டு பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர், அவர்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.