For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவில் இருந்தால் சாணம் கூட சாமி.. விலகினால் சாமி கூட சாணம்.. செல்லூர் ராஜூ அடடே!

அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும், விலகினால் சாமி கூட சாணமாக மாறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    செல்லூர் ராஜூவை தப்பு கணக்கு போடாதீங்க மக்களே !- வீடியோ

    சென்னை: அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும், விலகினால் சாமி கூட சாணமாக மாறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ தனது தெர்மாகோல் திட்டத்திற்கு பிறகு லைம் லைட் வெளிச்சத்திலேயே இருந்து வருகிறார். அவ்வப்போது கட்சி குறித்தும் ஆட்சி குறித்தும் அவர் கருத்து தெரிவித்து வருகிறார்.

    Dung will be god if it is in ADMK: Minister Sellur Raju

    அவரது கருத்துக்கள் சில சமயங்களில் காமெடியாகவும் சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

    [Read This: செயல்பாடு 'பவர் ஸ்டார்' மாதிரி இருந்தாலும்.. செல்லூரார் கில்லாடி.. தப்பு கணக்கு போடாதீங்க!]

    அப்போது அவர் பேசியதாவது, தேர்தல் வரும் போது டிடிவி தினகரனிடம் இருக்கும் தொண்டர்கள் எல்லோரும் அதிமுகவிற்கு திரும்பி வந்துவிடுவார்கள். டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக உள்ள அ.ம.மு.க. கட்சியை ஒரு அமைப்பாக கூட கருத முடியவில்லை.

    அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை இருக்கும் பக்கமே இருப்பார்கள் என்றார். முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செல்லூர் ராஜு அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும்; விலகினால் சாமி கூட சாணமாக மாறும் என்றார். அமைச்சரின் இந்த பேச்சு அதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Minister Sellur Raju says dung will be god if it is in ADMK. The god will be dung if it is go away from ADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X