முதல் தடவை தண்ணீர் பெற்று தந்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நடப்பதே வேறு: எச்சரிக்கும் துரைமுருகன்
காவிரி மேலாண்மை ஆணையம் முதல் தடவை தண்ணீரை பெற்றுக்கொடுத்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நடப்பதே வேறு என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் முதல் தடவை தண்ணீரை பெற்றுக்கொடுத்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நடப்பதே வேறு என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள அதிகாரிகள் பங்கேற்றனர்.
பல்வேறு கோரிக்கைகள்
இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 4 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சட்டசபையில் அறிவித்த முதல்வர்
இதைத்தொடர்ந்து காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் 31 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தெரிவித்தார்.
நடப்பதே வேறு
இதைத்தொடர்ந்து தலைமை செயலக வளாகத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை ஆணையம் முதல் தடவை தண்ணீரை பெற்றுக்கொடுத்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நியாயமல்ல, நடப்பது வேறு என அவர் கூறினார்.
வாழ்த்துவோம்
இதேபோல் ஆணையம் நடந்து தமிழகத்துக்கு நீரை பெற்று தந்தால் மகிழ்ச்சியடைவோம், காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு மாதத்திற்குரிய தண்ணீரை முறையாக பெற்றுத் தந்தால் வாழ்த்துவோம் என்றும் அவர் கூறினார்.