காவேரி மருத்துவமனையில் இருந்து கண்ணீர்விட்டு கதறியபடி சென்ற துர்கா ஸ்டாலின், செல்வி, மோகனா தமிழரசு
சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் சென்றனர்.
Recommended Video
சென்னை: காவேரி மருத்துவமனையில் இருந்து துர்கா ஸ்டாலின், செல்வி, மோகனா தமிழரசு உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் சென்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என காவேரி மருத்துவமனை சற்று நேரத்திற்கு முன்பு அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கையால் கருணாநிதியின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி ஆகியோர் கோபாலபுரம் புறப்பட்டனர்.
LIVE: #Karunanidhi 's daughter M.K. Selvi and daughters-in-law Durga Stalin and Mohana Tamizharasu seen entering his Gopalapuram residence. #KalaignarHealth https://t.co/1TcoOfEIz2 pic.twitter.com/72nC5e8Juk
— Kollywood Net (@Kollywoodnet) August 7, 2018
அப்போது மருத்துவமனை வாயிலில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அழுதபடியே காரில் சென்ற அவர்கள் கோபாலபுரம் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் நுழையும் போதும் அவர்கள் கதறியபடியே சென்றனர்.