தூக்கு மட்டுமில்லை.. தஷ்வந்த்தின் கொடூரங்களுக்காக 46 வருடங்கள் சிறை: மகிளா நீதிமன்றம் அதிரடி!
தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
செங்கல்பட்டு: தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் தஷ்வந்திற்கு மரண தண்டனையும் 46 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.
அதாவது ஆள் கடத்தலுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, பாலியல் வன்கொடுமைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மானபங்கம் குற்றத்திற்கு 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், தடயங்களை மறைக்க முயன்றதற்கு 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
போஸ்கோ சட்டத்தின்கீழ் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 46 வருடங்கள் சிறை மற்றும் மரண தண்டனை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டுள்ளது