For Daily Alerts
Just In
மணப்பாறை அருகே சோழர் கால தொல்லியல் பொருட்கள்!
மணப்பாறை அருகே சோழர் கால தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
திருச்சி: மணப்பாறை அருகே முற்காலச் சோழர் கால தொல்லியல் பொருட்கள், ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் இறையிலி நில எல்லை கற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருச்சி- மணப்பாறை சுற்றுவட்டாரங்களில் தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னரும் சோழர் கால கலைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தற்போதும் மணப்பாறை அருகே முதுமக்கள் தாழி உள்ளிட்ட முற்கால சோழர்களின் கலை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவலிங்க பீடம் உள்ளிட்டவையும் இதில் அடக்கம்.
இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடத்தினால் சோழர் கால பொருட்கள் ஏராளமாக கிடைக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
Comments
English summary
Archaeological remains found from early Chola Era near Trichy.
Story first published: Tuesday, June 26, 2018, 16:49 [IST]