For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் : பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளுக்கு மோடி, பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : இந்தியப் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கிறிஸ்துவ மக்களுக்கு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

அன்பின் மகத்துவத்தை உணர்த்திய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்த்துவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Easter Wishes from PM Modi and TN Governor Banwarilal

இன்று ஈஸ்டர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுவதை அடுத்து, இந்தியப் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கிறிஸ்துவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் , இந்த நன்னாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும் சகோதரத்துவமும் தழைத்தோங்கிட, இயேசு கிறிஸ்து போதித்த நல்வழிப் பாதையில் மக்கள் அனைவரும் தியாக உணர்வோடு, மனிதநேயம் கொண்டவர்களாக இந்த சமூகத்தில் வாழ்ந்திட வேண்டும் என்று தனது ஈஸ்டர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்துக்குறிப்பில், அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் எனது ஈஸ்டர் பெருநாள் நல்வாழ்த்துகள்.இந்த நன்னாளில், இயேசுபிரான் போதித்த அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மையை பின்பற்றி நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Easter Wishes from PM Modi and TN Governor Banwarilal . Indian PM Narendra Modi and TN Governor Banwarilal Purohit congratulates for Easter Ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X