For Quick Alerts
For Daily Alerts
Just In
மின் நுகர்வோர் கவனத்திற்கு... இனி ரூ.5000 வரை மின் கட்டணத்தை ரொக்கமாக கட்டலாம்!
சென்னை: மின் கட்டணத்தை 5 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக செலுத்தலாம் என்று விதிகளில் திருத்தம் செய்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.
2 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக மின் கட்டணம் செலுத்தினால் அதனை காசோலையாக செலுத்த வேண்டும் என்ற விதி தற்போது இருந்து வருகிறது. இது சிரமத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து 5 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக செலுத்தும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதே போல் நுகர்வோரிடம் பெறப்படும் காசோலை வங்கியில் பணம் இருந்தும் வேறு காரணங்களுக்காக திரும்பி நேரிட்டால், காசோலை மூலம் மீண்டும் மின் கட்டணம் செலுத்தும் வசதி மீண்டும் ஏற்படுத்தப்படுகிறது.
Comments
English summary
EB customer can pay the bill up to Rs.5,000 as cash- Electricity regulatory board says
Story first published: Thursday, May 21, 2015, 12:16 [IST]