For Quick Alerts
For Daily Alerts
Just In
பிரதமரை சந்திக்க எடப்பாடியார் நேரமே கேட்கலையாமே.. என்ன இப்படி சொல்கிறார் பொன். ராதா??
காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க முதல்வர் பழனிச்சாமி நேரம் கேட்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க முதல்வர் பழனிச்சாமி நேரம் கேட்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடியை அனைத்துக்கட்சியினருடன் சேர்ந்து சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டிருந்தார்.
ஆனால் நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்திக்க நேரமே கேட்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Comments
pon radhakirshnan edappadi palanisamy pm modi meeting ராதாகிருஷ்ணன் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி சந்திப்பு காவிரி விவகாரம்
English summary
Minister of State Pon Radhakirshnan has said that Cheif Minister Edappadi Palanisami did not ask time to meet Prime minister Modi.