For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேரன் பொறந்தாச்சு.. மகிழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஈரோடு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளார். பேரன் பிறந்ததால் 'தாத்தா'வாக பதவி உயர்வு பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் முதல்வர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன். பி.இ முடித்துள்ள இவருக்கும் திவ்யா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

Edappadi palanisamy become grand father

இதையடுத்து கர்ப்பமாக இருந்த திவ்யா, ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று மாலை மிதுன் - திவ்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதன் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாத்தா ஆகியுள்ளார். இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் பேரன் பிறந்துள்ள மகிழ்ச்சியில் உள்ளார் முதல்வர்.

English summary
Tamilnadu chief minister Edappadi palanisamy become a grand father
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X