For Daily Alerts
Just In
போர்க்கால அடிப்படையில் டெங்கு ஒழிப்பு.. கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
சென்னை: டெங்கு காய்ச்சலை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதேபோல் ஏடிஎஸ் கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்க வேண்டும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.
டெங்கு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் உயிர் பலி அதிகரித்து நிலைமை கைமீறிவிட்ட நிலையில், முதல்வர் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Tamilnadu CM Edappadi Palanisamy ordered district collectors to control Dengue fever.
Story first published: Wednesday, October 4, 2017, 21:00 [IST]