ஜெயலலிதாவை விட எடப்பாடி ஆட்சியே சூப்பர்- திண்டுக்கல் சீனிவாசன் சர்டிபிகேட்
தமிழகத்தில் ஜெ., ஆட்சியை விட சிறப்பான ஆட்சி தரும் எடப்பாடியாரின் ஸ்டைல் வித்தியாசமானது என்று திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்காடு : தமிழகத்தில் ஜெயலலிதா கொடுத்த ஆட்சியை விட சிறப்பான ஆட்சி தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஏற்காடு மலர்கண்காட்சியைத் துவக்கவிழாவில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசிபெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தபப்ட்டு வருகின்றன. ஜெயலலிதா கொடுத்ததை விட சிறப்பான நல்லாட்சியை எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு கொடுத்து வருகிறார்.
மக்களோடு மக்களாகப் பழகும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஸ்டைல் மிகவும் வித்தியாசமானது; இது வேறு யாருக்கும் வராது என்றும் குறிப்பிட்டுள்ளார்.