For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழங்குடியினரின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் - முதல்வர் உறுதி

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் 84 திட்டங்களை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

    நீலகிரி மாவட்டம்

    44. 1969-ஆம் ஆண்டு கூடலூர் ஜன்மம் நில (ஒழிப்பு மற்றும் ரயத்துவாரிக்கு மாற்றுதல்) சட்டத்தின் கீழ் கூடலூர் ஜன்மத்திற்கு உட்பட்ட நிலங்களை தீர்வு செய்வதற்கான எஞ்சிய பணிகளை விரைவில் முடிப்பதற்கு, மூன்று நபர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழுவில், நீலகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே பணிபுரிந்துள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும், வன அதிகாரி ஒருவரும், வருவாய்த் துறை அதிகாரி ஒருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். உள்ளூரில் வசிப்பவர்கள், குறிப்பாக பழங்குடியினர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இப்பணிகளை விரைவுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

    45. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவிற்கு கூடுதல் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

     Edappadi Palanisamy speech about police station death

    கோயம்புத்தூர் மாவட்டம்

    46. கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கியச் சாலையான திருச்சி பிரதான சாலையில் சிங்காநல்லூர், ராமநாதபுரம், சுங்கம் ஆகிய மூன்று முக்கிய சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் 2018-19ல் மேற்கொள்ளப்படும்.

    47. கோயம்புத்தூர் மாவட்டம், திருச்சி சாலை, எல்&டி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி, தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் 2018-19ல் மேற்கொள்ளப்படும்.

    48. கோயம்புத்தூர் மாவட்டம், ஊட்டி செல்லும் துடியலூர் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் 2018-19ல் மேற்கொள்ளப்படும்.

    49. கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலைக்கு எளிதாகச் செல்லும் வகையில் லாலி ரோடு அருகே ஒரு பாலம் அமைக்கும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

    50. கோயம்புத்தூர் மாவட்டம், சாய்பாபா கோயில் சந்திப்பு, துடியலூர் சந்திப்பு மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் 2018-19ல் மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு மாவட்டம்

    51. ஈரோடு மாவட்டம், அந்தியூரில் ஒரு புதிய போக்குவரத்து காவல் நிலையம் ஏற்படுத்தப்படும்.

    திருப்பூர் மாவட்டம்

    52. திருப்பூர் மாவட்டம், பல்லடம் புறவழிச் சாலை 8.3 கிலோ மீட்டர் நீளம் அமைக்கும் பணியில், முதற்கட்டமாக விரிவான திட்ட அறிக்கை நெடுஞ்சாலைத் துறையால் தயாரிக்கப்படும்.

    53. உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 படுக்கைகள் கொண்ட பொதுப் பிரிவு ஏற்படுத்தப்படும். மேலும், 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்படும்.

    54. பல்லடம் உட்கோட்டத்தில் உள்ள மங்கலம் காவல் நிலைய காவல் ஆளிநர்களுக்கு 80 குடியிருப்புகள் 11 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கட்டித் தரப்படும்.

    திருநெல்வேலி மாவட்டம்

    55. சங்கரன்கோவிலில் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு 96 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் கட்டித் தரப்படும்.

    56. தென்காசி போக்குவரத்து காவல் நிலையத்திற்கு 69 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் கட்டித் தரப்படும்.

    57. சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்திற்கு ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டித் தரப்படும்.

    58. திருநெல்வேலி மாவட்டம் மானூரில் 52 குடியிருப்புகளும், ஊத்தமலையில் 34 குடியிருப்புகளும் என மொத்தம் 86 காவலர் குடியிருப்புகள் 15 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் கட்டித் தரப்படும்.

    தூத்துக்குடி மாவட்டம்

    59. தூத்துக்குடி மாவட்டம், சூழ-7 மற்றும் சூழ-45யும் இணைக்கும் கயத்தாறு - கடம்பூர், பசுவந்தனை -எப்போதும் வென்றான் ஆகிய சாலைகளை 31 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி 2018-19 மற்றும் 2019-20ல் ஊசுஐனுஞ திட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

    60. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மருத்துவ உபகரணங்கள் 8.95 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். இப்பிரிவிற்கு 6 மருத்துவர்கள், 25 செவிலியர்கள் உள்ளிட்ட 31 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

    61. தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன லீனியர் ஆக்ஸிலேட்டர் (Linear Accelerator) கருவி அமைக்கப்படும்.

    62.நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்திற்கு ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டித் தரப்படும்.

    63.தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்திற்கு ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.

    English summary
    Today the 3 days conference of IAS/ IPS officers ends. CM Edappadi Palanisamy announces 84 projects for TN.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X