அச்சச்சோ.. எல் நினோ வருதாமே.. எச்சரிக்கிறது வானிலை மையம்!
தென்மேற்கு பருவமழையின் பிற்பகுதியில் கடலில் எல் நினோ உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி தென்மேற்கு பருவமழையின் பிற்பகுதியில் கடலில் எல் நினோ உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எல்நினோ நீரோட்டம் உருவானாலும் பலவீனமாகத்தான் இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. இதனால் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் அடுத்த 3 நாட்களுக்குள் தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழையின் பிற்பகுதியில் கடலில் எல்நினோ நீரோட்டம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எல்நினோ நீரோட்டம் உருவானாலும் பலவீனமாகவே இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஜூன் 13 மற்றும் 14 தேதிகளில் பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பருவமழை தொடங்கும் என்று வானிலை மைய தலைவர் கே.ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு சாராசரி பருவமழை 100 சதவீதம் பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.