ஏழைகளின் ஊட்டி ஏலகிரியில் கோடை விழா – மே இறுதியில் கொண்டாட்டம்
வேலூர்: விடுமுறை பிரதேசங்களில் ஒன்றான ஏலகிரியில் வருகின்ற மே மாத இறுதியில் கோடைவிழா என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏழைகளின் ஊட்டி எனஅழைக்கப்படுவது ஏலகிரி. ஆண்டு தோறும் கோடைகாலமான மே மாதத்தில் கோடை விழாவினை மாவட்ட நிர்வாகம் நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கானகோடை விழா மே 30 மற்றும் 31 ஆம் தேதி நடத்துவது என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அறிவித்துள்ளது.
ஏலகிரி ஏழைகளின் ஊட்டி என்று தான் பெயர். ஆனால் அந்த மலையின் திரும்பிய பக்கம்மெல்லாம் சொகுசுவிடுதிகள், ஹோட்டல்கள் உள்ளன. இங்கு ஒரு இரவு தங்க 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரைவிலை வைக்கிறார்கள் அங்குள்ள முதலாளிகள் என்ற குற்றச்சாட்டு கடந்த ஆண்டு சுற்றுலாபயணிகளால் குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கு முந்தைய வருடத்திலும் இதே குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கட்டண கொள்ளையை தடுக்க அரசு சுற்றுலா கழகம் சார்பில் விடுதி வசதி ஏற்படுத்தி தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு புதிய அறிவிப்பு போல் ஒவ்வொரு வருடமும் அறிவிக்கிறார்களே தவிர செயல்படுத்த மறுக்கிறார்கள் என்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் கோடை விழாவை பெரிய அளவில் கொண்டாட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications